shadow

புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) முதலாமாண்டு மாணவர்கள்,மருத்துவ மாணவர்களுக்கு நாளை, ஜூலை 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

எம்.பி.பி.எஸ். 2ம் ஆண்டு மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், தங்களுடைய முதல் தவணை கொரோனா தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், 2வது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்திலே செலுத்திக் கொள்ளலாம்

தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம் என புதுவை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.