shadow

தேர்வு எழுத அறைக்கு முன் நின்றிருந்த மாணவர் திடீர் மரணம்!

தேர்வு எழுதுவதற்காக தேர்வறை முன் நின்று கொண்டு இருந்த மாணவர் திடீரென மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சதீஷ் என்பவர் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து தேர்வு எழுதிய தேர்வு நிலையத்திற்கு வந்தார்

அவர் தேர்வறை முன் காத்திருந்தபோது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்தார்

அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

12ஆம் வகுப்பு மாணவர் தேர்வு எழுத வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது