சீன அதிபரின் அறிவிப்பால் எல்லையில் பதட்டம்

இந்தியா சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதட்டம்அதிகரித்து வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் போருக்கு தயார் ஆகுங்கள் என்று சீன நாட்டு ராணுவ வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக வந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த ஆண்டு இந்தியா வந்த சீன அதிபர், பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்புக்கு உள்ளானார். இருப்பினும் இந்தியா மற்றும் சீனாவின் லடாக் எல்லையில் பெரும் பதட்டம்நிலவி வருகிறது.

மேலும் சீனாவிற்கு எதிராக தைவான் புரட்சி செய்து வருவதாகவும், சீனாவிற்கு உள்ளேயே ஹாங்காங் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளதாகவும், தென் சீன எல்லையில் மலேசியா, அமெரிக்கா சீனாவை எதிர்க்க தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுவதால் சீனா தனது படைகளை போருக்கு தயாராகுமாறு கூறியிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகளின் விசாரணையில் இருந்து தப்பிக்கவும் இந்த விஷயத்தை திசை திருப்பவும் சீனா, எல்லையில் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது

Leave a Reply