குழந்தையை பெற்றால் மட்டும்
போதுமா …?
பெற்று விடுவது என்ன உன்…
தொழிலா …?
பெற்ற குழந்தையை பார்முழுதும்…
பொற்பிள்ளையாக மாற்றுவது ….
பெற்றோர் கடமையல்லவா …?

பிஞ்சு குழந்தைமுன்…
புகைவிடும் அறிவிலியே …
பிஞ்சு உடலில் நஞ்சை
வைக்கிறாய்….!!!
பிஞ்சு மனதில் நச்சு
செடியை வளர்க்கிறாய்…!!!
நாகரீக உலகில் இதுதான் நீ செய்யும்
நாகரீகமோ ….?

குடும்ப சண்டையை
குழந்தை முன் கொட்டாதீர்
குழந்தைகள் வாழ்வில் கொடூரத்தை
விதைக்காதீர்
பெற்றோர் என்ற திமிரில் பிள்ளைகளை
வதைக்காதீர் …!!!
பெற்றோர் கதையை பிள்ளைகள் முன்
பேசாதீர் ….!!!
வருங்கால சிற்பங்களை சித்திரவதை
செய்யாதீர் ….!!!

இருகரம் கூப்பி கேட்கிறேன்
குழந்தை துன்புறுத்தலை
வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும்
செய்யாதீர் ,,செய்யாதீர் …செய்யாதீர் ….!!!

Leave a Reply