shadow

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்தார்.

அதில், அவருக்கு தொற்று உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இரண்டு நாட்கள் வீட்டுத் தனிமையில் இருந்த முதலமைச்சர் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.