டி.என்.பி.எல் கிரிக்கெட்: திருவள்ளூர் அணியை வீழ்த்திய சேப்பாக்கம் அணி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி போலவே தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான போட்டி கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் நேற்று சேப்பாக்கம் அணியும் திருவள்ளூர் அணியும் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய சேப்பாக்கம் அணி மிக எளிதாக 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
சேப்பாக்கம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கோபிநாத் கடைசி வரை அவுட் ஆகாமல் 54 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.