கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு: சென்னை பல்கலை முக்கிய அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவடைந்து விடும் என்பதால் அதன் பிறகு செமஸ்டர் தேர்வு நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இருப்பினும் செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆன்லைனில் பாடம் நடத்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று முதல் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply