shadow

தோனியின் முயற்சி வீண்: சிஎஸ்கே அணிக்கு முதல் தோல்வி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கெயில் அதிரடியால் 20 ஓவர்களில் 197 ரன்கள் குவித்தது.

198 என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேட்ச் ஃபினிஷர் என்று கூறப்படும் தோனி கடைசி ஓவரை எதிர்கொண்டும் போட்டியை வெற்றி பெற முடியாதது சென்னை அணி ரசிகர்களுக்கு அதிருப்தியை அளித்தது.

Leave a Reply