ஐபிஎல் போட்டி 2018: முதல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி
நேற்று தொடங்கிய ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்ததால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் வெற்றி பெற 166 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி முதலில் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினாலும் பிராவோ அதிரடியால் 19.4 ஓவர்களில் 169 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது
30 பந்துகளில் 68 ரன்கள் அடித்த பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு ஆண்டு தடைக்கு பின்னர் களமிறங்கிய சென்னை அணி, முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது அந்த அணியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.