சென்னை எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு திடீர் தற்கொலை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவகத்தில் இரவு பணியில் இருந்த காவல்துறை பணியாளர் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் நேற்று சென்னை சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் பெயர் சதீஷ் என்றும், 33 வயதான அவர் ஏன் திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இரவு நேர பணியில் உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.