சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு 13ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகள் விடுமுறை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்
தமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
English Summary: Chennai schools, colleges to remain close till December 13
Leave a Reply
You must be logged in to post a comment.