சென்னை சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் தீவிபத்து. 4 பேர் படுகாயம்
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் ஜவுளிக்கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையின் சமையல் அறையில் இன்று காலை மதிய உணவு சமைக்கும் போது சிலிண்டரில் இருந்து கேஸ் லீக் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் 17 வயது மூர்த்தி மற்றும் 20 வயது காதர், 19 வயது இலியாஸ் அகமது, மற்றும் 20 வயது இப்ராஹிம் அலி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இவர்கள் நால்வரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து மேற்கு மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.