shadow

சென்னை எண்ணூரில் ’கடலில் கொட்டியது 20 டன் எண்ணெய்’ : திடுக்கிடும் தகவல்

சென்னை அருகேயுள்ள எண்ணூர் துறைமுகத்தில் கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு சரக்கு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் தற்போது அந்த பகுதியின் கடல் தண்ணீரில் எண்ணெய் கலந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலில் கொட்டிய கச்சா எண்ணெயின் அளவு சுமார் 20டன் ஆக இருக்கும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு நீண்டக்கால பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

ஆரம்பத்தில் 1 டன் மட்டுமே கடலில் கொட்டியதால கப்பல் நிர்வாகிகள் கூறிய நிலையில் தற்போது அதற்கு மாறாக 20 டன் கொட்டியிருக்கலாம் என்ற தகவல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்த புகார் மனு ஒன்றை இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை செய்கிறது.

Leave a Reply