shadow

இன்னும் சிறிது நேரத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நிலையில் தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது

திருவள்ளூர் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்னும் சிறிது நேரத்தில் கன மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.