shadow

அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் இடங்கள்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

நெல்லை கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் கோவை திருப்பூர் திண்டுக்கல் தேனி கள்ளக்குறிச்சி சேலம் நாமக்கல் தென்காசி தூத்துக்குடி மாவட்ட பகுதிகளிலும் அடுத்த சில மணி நேரங்களில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் மட்டும் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது