shadow

முகாந்திரம் இருந்தால் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யலாம்: சென்னை ஐகோர்ட்

பிரபல இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் பேசியபோது இந்து கடவுளை அவர் விமர்சனம் செய்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்று இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக, இயக்குனர் பாரதிராஜா மீதான புகார் குறித்து விசாரிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என்பது தெரியவரும்

Leave a Reply