shadow

சிம்புவின் பீப் பாடல் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் சிம்பு கடந்த 2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் கம்போஸ் செய்த ஒரு பாடலில் இணையதளங்களில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பாடலில் கெட்ட வார்த்தைகள் இருந்ததால் சிம்புவுக்கு மகளிர் அமைப்புகள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு தரப்பில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சிம்பு மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என கோவை மாஜிஸ்திரேட் விசாரணையில் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.