shadow

காவிரி பெரியதா? மெரினா பெரியதா? தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து விவசாய சங்கத்தலைவர் அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு காவிரிக்காக நடைபெறும் போராட்டம் பெரியதா? அல்லது மெரிக்கா கடற்கரை பெரியதா? என்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம் நடத்த அய்யாக்கண்ணு தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை தினங்களில் லட்சக்கணக்காண மக்கள் கோயில், தேவாலயங்களில் வழிபாடு செய்கின்றனர்.

அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறி மக்கள் அந்த பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என கூற முடியுமா? என கேள்வி எழுப்பினார். போராட்டங்களை ஒழுஙகுபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. போராட்டங்களைத் தடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்த நீதிபதி பின்னர், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Leave a Reply