shadow

சென்னை பல்லாவரத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இன்று

சென்னையில் அரசு பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த வாரம் அண்ணா சாலையில் வழிகாட்டும் பலகை மீது அரசு பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை பல்லாவரத்திலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு புறநகர் பேருந்து பல்லாவரத்தில் மேம்பாலத்திற்காக கட்டப்பட்டிருந்த பள்ளம் அருகே பேருந்து வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து அந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்து காரணமாக பேருந்தின் முன்பக்கம் பலமாக சேதமாகின. இந்த விபத்தால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுனருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உள்பட பேருந்தின் சில பாகங்கள் சேதம் அடைந்தது.

Leave a Reply