shadow

இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்குமா? சென்னை டெஸ்ட் போட்டி விறுவிறுப்பு

டிசம்பர் 16ஆம் தேதி சென்னையில் தொடங்கிய இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 471 பெற்று வலுவான நிலையில் இருந்தாலும் இந்திய பேட்ஸ்பேன்கள் பதிலடி கொடுத்து 7 விக்கெட் இழப்பிற்கு 759 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் கருணாநாயர் 303 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ராகுல் 199 ரன்கள் அடித்தார்.

இதனால் இங்கிலாந்து அணி தற்போது 270 ரன்கள் பின் தங்கியுள்ளது. இன்று ஆட்டத்தின் ஐந்தாவது நாள் என்பதால் அஸ்வின் உள்பட சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜாலம் செய்தால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply