சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது ஆண் கொரோனா நோயாளி ஒருவர் திடீரென மருத்துவமனையில் தப்பி ஓடிவிட்டதால் சுகாதாரத்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரால் அதிக நபர்களுக்க் கொரோனா நோய் பரவும் ஆபத்து இருப்பதால் அவரை உடனடியாக கண்டுபிடிக்க போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக உள்ளனர்

கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தப்பி ஓடி வரும் நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 63 வயது ஆண் ஒருவர் இன்று தப்பியுள்ளார்

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் இது குறித்து விசாரணை செய்து தப்பியோடிய கொரோனா நோயாளியை தேடும் பணியில் தீவிரமாக உள்ளனர் நோயாளி ஒருவர் தப்பி ஓடி இருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply