சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அதிர்ச்சி தகவல்

சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடத்திற்கு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் இதனையடுத்து இந்த மூன்று இடங்களிலும் போலீஸ் தீவிர சோதனை
செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இருப்பினும் இது வெறும் வதந்தியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply