மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது
டெல்லி ஓட்டல் ஒன்றில் நண்பர்களுடன் தங்கியிருந்த தமிழக தொழிலதிபர் ஒருவர் பக்கத்து அறையில் மாணவி ஒருவர் குளிப்பதை வீடியோ படமெடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 29 வயது தொழிலதிபர் ஒருவர் பிசினஸ் விஷயமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு கிர்தி நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அவருடன் 2 நண்பர்களும் தங்கினர்.
அவரது அறைக்கு அருகே ராஞ்சியில் இருந்து கல்வி சுற்றுலாவிற்கு வந்த மாணவ, மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில் மாணவி ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காற்று வெளியேறும் இடத்தில் ஏதோ நகருவது போல் இருந்துள்ளது. சரியாக கவனிக்கையில் மொபைல் போன் என்று அறிந்து, கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அவர்களுடன் வந்த ஆசிரியர் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தொழிலதிபர் அறைக்கு சென்றனர். அங்கு தொழிலதிபர் தனது நண்பர்கள் மீது பழியை போட்டுள்ளார். அவர்களை கைது செய்த போலீசார், மொபைல் போன்களை பறிமுதல் செய்து, விசாரணை செய்தனர். பின்னர் விசாரணையை தொழிலதிபர் மீது திருப்பினர். அதில் குற்றம் கண்டறியப்பட்டது. இதையடுத்து தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.