shadow

சென்னை விமான நிலையத்தில் 75வது முறையாக உடைந்த கண்ணாடி! கார் சேதம்

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து சேதமாவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுவரி 74 முறை சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று 75வது முறையாக மீண்டும் சென்னை விமானநிலையத்தின் புறப்பாடு பகுதியில் மூன்றாவது நுழைவு வாயில் அருகே கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றும் சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

எனினும் இந்த கண்ணாடி உடைப்பு சம்பவத்தால் யாருக்கும் காயமில்லை என்பது ஒரு ஆறுதல். இருப்பினும் இனிமேலும் கண்ணாடி உடையாத வகையில் விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply