செங்கல்பட்டு டோல்கேட்: பணத்தை கொள்ளையடித்தது யார்? திடுக்கிடும் தகவல்
சமீபத்தில் நடந்த செங்கல்பட்டு டோல்கேட்டில் வன்முறையின்போது கலவரம் செய்தவர்கள் டோல்கேட் பணத்தை திருடியதாக புகார் கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பணத்தை டோல்கேட் ஊழியர்களே கொள்ளையடித்தது சிசிடிவி கேமிரா மூலம் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் டிரைவர் மற்றும் டோல்கேட் ஊழியர் இடையேநடந்த மோதலில் பொதுமக்கள் ஆத்திரத்தில் டோல்கேட்டை அடித்து நொறுக்கினர். அப்போது, சுங்கச்சாவடிக்குள் இருந்த ரூ.18 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக டோல்கேட் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. அதில் ஒருவர் பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக சுங்கச்சாவடி ஊழியர்களே பணத்தை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. டோல்கேட்டில் வேலை செய்த செந்தில் மற்றும் பரமசிவம் ஆகிய இருவர் தான் கொள்ளையடித்தவர்கள் என்பது தெரிய வந்ததால் அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.