shadow

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும். சுப்பிரமணியன் சுவாமி

பாஜக முத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி போட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு சசிகலா உள்பட மூன்று பேர் தற்போது சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஆனால் சசிகலா சிறைக்கு செல்ல காரணமான சுவாமியே தற்போது சசிகலாவுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பேசி வருவது பெரும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபோது சட்டப்படி சசிகலாதான் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி வந்த சுப்பிரமணியன் சுவாமி, தற்போது சசிகலா சிறை சென்றவுடன் அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் அவரது முயற்சியில் சசிகலா தமிழக சிறைக்கு மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply