shadow

பெகாசஸ் மென்பொருளை முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாங்கினார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சமீபத்தில் அளித்த பேட்டி கூறியபோது பெகாசஸ் உளவு மென்பொருளை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்க அரசுக்கு விற்க தீவிர முயற்சிகள் நடந்தன. ஆனால் நான் தான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெகாசஸ் மென்பொருளை வாங்கினார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே பெகாசஸ் உளவு மென்பொருளை மத்திய அரசு வாங்கி முக்கிய பிரபலங்களின் செல்போன்களை ஒட்டு கேட்டதாக கூறப்படுகிறது.