சென்னை ரைனோஸ் மற்றும் கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சிசி எல் கிரிக்கெட் போட்டி பரபரப்பான நிலையில் “டை” யில் முடிந்தது.
முதலில் பேட் செய்த சென்னை ரைனோஸ் அணி20 ஓவர்களில் 193 ரன்கள் எடுத்தது. சென்னை ரைனோஸ் அணியின் விஷ்ணு 48 ரன்களும், விக்ராந்த் 52 ரன்களும், பிரித்வி 37 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் புல்டோசர்ஸ், 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்களே எடுத்ததால் ஆட்டம் டை ஆனதாக அறிவிக்கப்பட்டது.
37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த சென்னை ரைனோஸ் அணியின் விக்ராந்த் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.