தமிழக நீட் மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்: சி.பி.எஸ்.இ. மேல்முறையீடு
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ள நிலையில் இதுகுறித்து கடந்த வெள்ளியன்றே சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்ட தீர்ப்புக்கு எதிராக சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும், இந்த மேல்முறையீட்டு மனு மிகவிரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.