ரூபாய் நோட்டுக்கள் விவகார வழக்கில் மத்திய அரசு கேவியட் மனுதாக்கல்
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு சாதாரண பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உ.பி மாநிலத்தை சேர்ந்த சங்கர்லால் பாண்டே மற்றும் விவேக் நாராயண் ஆகியோர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு வரும் செவ்வாய் அன்று விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் சுப்ரீம் கோர்ட் எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என அவசர கேவியட் மனு ஒன்றை மத்திய அரசு சார்பில் சற்று முன் தாக்கல் செய்பப்பட்டுள்ளது. இதனால் வரும் செவ்வாய் அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தாலும் மத்திய அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
ஆனாலும் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்யும் என்றே சீனியர் வக்கில்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.