shadow

ஏ.டி.எம்-ல் இனி தினமும் ரூ.4500 எடுக்கலாம். ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வரும் மத்திய அரசு ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.2,500 என நிர்ணயம் செய்தது. மேலும்  பணம் எடுக்கும் வார உச்ச வரம்பு, ரூ.24,000 என்றும் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தினமும் பணம் எடுக்கும் உச்சவரம்பை தற்போது மாற்றியுள்ளது. நாளை முதல் அதாவது ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம்-களில் தினமும் ரூ.4,500 வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், வாரத்திற்கு பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகததால் பணம் எடுக்கும் வார உச்ச வரம்பு, அதே ரூ.24,000-ஆகவே தொடர்கிறது.

மேலும் இன்று பாரத பிரதமர் தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த உள்ளார். இந்த உரையில் மேலும் ஒருசில அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.,

Leave a Reply