shadow

baby 1 ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை பெற்றெடுத்த தாய் அடையும் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையே இருக்காது. அந்த அளவுக்கு ஒரு தாய் தன்னுடைய குழந்தையின் மீது அன்பு செலுத்துவார். ஆனால் சீனாவில் உள்ள ஒரு தாய், தான் பெற்றெடுத்த குழந்தையை கடித்து சாப்பிட முயன்றதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

தெற்கு சீனாவை சேர்ந்த சென்ஜென் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது லீ ஜெங்குவா என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தையை தாயின் அருகில் வைத்துவிட்டு நர்ஸ் சென்றுவிட்டார். திடீரென குழந்தை பயங்கரமாக அழுத சத்தம் கேட்டு நர்ஸ் திரும்பி வந்து பார்த்தபோது, குழந்தையின் கையை, அதன் தாய் கடித்துக்கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனடியாக குழந்தையை அந்த தாயிடம் இருந்து பிடுங்கி நர்ஸ் காப்பாற்றியதால் குழந்தை படுகாயத்துடன் உயிர் பிழைத்தது.

baby
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது, ‘குழந்தையை கடித்த தாயின் மனநிலை குறித்து ஆராய்ந்து வருவதாகவும், தங்களுடைய மருத்துவ அனுபவத்தில் இதுபோன்ற ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்ததில்லை என்று கூறியுள்ளனர்.

Leave a Reply