ரத்து செய்யப்பட்ட ரயில்களின் கட்டணம் திரும்ப அளிக்கப்படும். தென்னக ரயில்வே அறிவிப்பு
வர்தா புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் முன்பதிவு கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே அதிகாரிகள் கூறியபோது, ‘சென்னை வர்தா புயலால் தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரத்து செய்யப்பட்ட ரயில் கட்டணம் செலுத்தப்படும். கவுண்டர்களில் டிக்கெட் பெற்றவர்கள் மீண்டும் அதே கவுண்டருக்கு சென்று தங்கள் கட்டணங்களை திரும்ப பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.