கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திவாலாகிறதா?
ஃபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா தேர்தலில் பெருமளவில் முறைகேடு செய்ததாக கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் இந்த நிறுவனம் திவாலாகும் நிலையில் இருப்பதாக வதந்திகள் கிளம்பியுள்ளது.
கேம்பிரிட்ஜ் அனால்டிகா தனது செயல்பாட்டை நிறுத்துகொள்ள தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க, பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளீயாகியுள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
Leave a Reply
You must be logged in to post a comment.