shadow

செல்லாத ரூபாய் வைத்திருந்தால் 5 மடங்கு அபராதம். மத்திய அரசின் புதிய சட்டம் நிறைவேறுமா?

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள டிசம்பர் 30ஆம் தேதி கடைசி தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30க்கு பின்னர் செல்லாத நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர ட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி டிசம்பர் 31ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பர்களுக்கு 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும். பத்து பழைய ரூபாய் நோட்டுகளுக்கு மேல வைத்திருந்தால், இந்த தண்டனை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது

இந்த அவசர சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனை இன்றி நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply