shadow

ஓபிஎஸ் அணிக்கு தாவுகின்றார்களா சி.ஆர்.சரஸ்வதி-வளர்மதி?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக, ஓ பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. இதையடுத்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சியில் உள்ளது.

இந்த நிலையில் சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் கட்சியின் முழு கட்டுப்பாடும் டிடிவி தினகரன் கைக்கு வந்தது., ஆனால் அந்த தினகரனே இன்று அல்லது நாளை கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘இரட்டை இலை’ சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் புகாரில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிமுகவை ஒன்றாக இணைக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர். அதற்கு ஒரே தடையாக இருக்கும் தினகரன் சிறைக்கு சென்றுவிட்டால் கட்சி ஒட்டுமொத்தமாக மன்னார்குடி மாஃபியாக்களிடம் இருந்து தப்பிவிடும் என்றே தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சசிகலா அணிக்கு முழு ஆதரவு கொடுத்துவந்த சி.ஆர். சரஸ்வதி மற்றும் பா.வளர்மதி ஓபிஎஸ் அணிக்கு தாவ வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி தாவினால், சசிகலா அணியின் நடந்த சில மர்மங்கள் ஓபிஎஸ் அணி சார்பில் வெளியாக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply