shadow

தஞ்சாவூர்-அரவக்குறிச்சி-திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

admkகடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது அதிக அளவு பணப்பட்டுவாடா நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

அதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பதவி ஏற்கும் முன்னரே மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.

இந்நிலையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் நவம்பர் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் சற்று முன்னர் மூன்று தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் ரங்கசாமி, அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ் போட்டியிடுகின்றனர் என அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply