ஒரு மணி நேரத்தில் 40000 மின்னல்கள். இங்கிலாந்து நாட்டில் பரபரப்பு
இங்கிலாந்து நாட்டில் இரவு முழுவதும் சுமார் 60000 மின்னல்கள் தோன்றியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் உள்ள கெண்ட் என்ற நகரைல் இரவில் நிம்மதியாக மக்கள் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் நள்ளிரவுக்கு மேல் திடீரென வானத்தில் தொடர்ச்சியாக மின்னல்கள் தோன்றின. இரண்டு மணி நேரத்தில் 40000 மின்னல்களும், இரவு முழுவதும் சுமார் 60000 மின்னல்களும் தோன்றியதாக அந்நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த மின்னல்களால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. வானில் தோன்றிய இந்த வெளிச்ச விளையாட்டை அந்த நாட்டு மக்கள் அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளீயிட்டுள்ளன
Leave a Reply
You must be logged in to post a comment.