பிரிட்டன் உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா! காரணம் என்ன?
பிரிட்டன் நாட்டின் உள்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்த ஆம்பர் ரூட் என்பவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஊழல் புகார் ஒன்றில் சிக்கியதை அடுத்ஹு நேற்று தனது பதவியில் இருந்து விலகியதாக பிரிட்டன் நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டனில் வசிக்க சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது குறித்த பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்த நிலையில், ஊழல் புகாரில் சிக்கிய உள்துறை அமைச்சர் ஆம்பர் ரூட், தனது பதவியில் இருந்து நேற்று விலகினார். இதுகுறித்து அவர் பிரதமர் தெரசா மேவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
கடிதத்தை பெற்றுக் கொண்ட பிரிட்டன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ஆம்பர் ரூட்டின் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் தெரசா மே ஏற்றுக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.