shadow

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை மேலெழுந்தது.

ஓபிஎஸ்-க்கு எதிரான கோஷங்களும் வலுபெறத் தொடங்கின. இந்த கோஷங்கள “ஓபிஎஸ்-ஏ வெளியேறு” என பரினாமமடையத் தொடங்கின

ஓபிஎஸ கூட்டம் நடந்துக் கொண்டிருக்கும்போதே வெளியேறினார்.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொதுக்குழுவில் எடப்பாடிக்கு வெள்ளி கிரீடமும் வீரவாளும் பரிசாக வழங்கப்பட்டது.

அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.