காதலனிடம் ரூ.40 கோடி நஷ்டஈடு பெற்ற பெண்! ஏன் தெரியுமா?
காதலினிடம் ஒரு இளம்பெண் நீதிமன்றம் வரை சென்று போராடி ரூ.40 கோடி நஷ்ட ஈடாக பெற்றார். அவருடைய ஆபாச புகைப்படத்தை காதலன் இணையத்தில் வெளியிட்டதே இதற்கான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஜேன் டோயே என்பவ்ர் டேவிட் கே இலாம் என்பவரை கட்ந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்தார். ஆனால் கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் ஏற்பட்டுவிட்டது.
இந்த நிலையில் முன்னாள் காதலியை பழிவாங்க முடிவு செய்த டேவிட், ஜேனின் ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஆபாச பட வெப்சைட்டில் வெளியிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேன், இதுகுறித்து கலிபோர்னியா மாவட்ட கோர்ட்டில் ஜேன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு பாதிக்கப்பட்ட ஜேனேவுக்கு அவரது காதலன் டேவிட் ரூ.40 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.