shadow

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல். ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

தமிழத்தில் எதிர்க்கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருவதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஒரு மர்ம கடிதத்தில் நான்கு ரயில்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தில் மாவோயிஸ்ட் என்று குறிப்பிட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீசார் உடனடியாக விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இந்த மிரட்டல் கடிதத்தை ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி கங்காதரன் என்பவர்தான் அனுப்பியதாக கண்டுபிடித்தனர்.

ஒரே மணி நேரத்தில் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் அவரை அவருடைய வீட்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர். தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply