shadow

ரஷ்ய மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு. தீவிரவாதிகளின் கைவரிசையா?

ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் எழுந்துள்ள நிலையில் சற்று முன்னர்  ரஷ்யாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்ரு குண்டுவெடித்ததில் 10 பேர் பலியாகி உள்ளாதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் உள்ள செயிண்ட்.பீட்டர்ஸ்பர்க் நகரின் 2 சுரங்க ரயில் நிலையங்களில் சற்று முன்னர் பயங்கர வெடிகுண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ரயில் நிலையத்தில் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சுரங்க ரயில் நிலையத்தை சுற்றிலும் தற்போது கூடுதல் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாகௌம், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. காயம் அடைந்தவர்களில் ஒருசிலர் அபாய கட்டத்தில் இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

குண்டிவெடிப்பு நிகழ்ந்ததை அடுத்து, பல்வேறு மெட்ரொ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கிருந்த பொதுமக்களை உடனடியாக வெளியேற்றினர். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply