திமுக எம்பி செந்தில்குமார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்: பாஜக பிரமுகர்
திமுக எம்பி செந்தில்குமார் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என பாஜக பிரமுகர் நாராயண் திருப்பதி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
தி மு கவின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஒரு மருத்துவர் என்று அறிகிறேன். பொறுப்போடு இருக்க வேண்டிய ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து சமூக ஊடக பதிவுகளில் மக்களிடையே பதட்டத்தையும், அச்சத்தையும், அரசின் மீது நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தி வருவது முறையல்ல
மக்கள் பிரதிநிதி நேரடியாக சுகாதார அமைச்சரிடமோ, முதல்வரிடமோ தன் ஆலோசனைகளை கூறலாம். இது எனது வேண்டுகோள். அறிவுரை அல்ல. விமர்சனம் அல்ல. இக்கட்டான நேரத்தில் அரசுடன் ஒத்துழைப்பதே ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு, மருத்துவருக்கு சிறப்பு.
இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் செந்தில்குமார் எம்பி, ‘நன்றி., அரசு மருத்துவர்களின் நலன் காக்க பட வேண்டும் அவர்களுக்கு உலக தரம் வாய்ந்த பாதுகாப்பு PPE உபகரணம் வழங்க பட வேண்டும் என்பது தான் நோக்கம்’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.