உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி! ஓபிஎஸ் தகவல்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டெல்லி சென்று பாரத பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தமிழக நலன் குறித்தே ஆலோசிக்கப்பட்டது என்று நேற்று ஓபிஎஸ் கூறிய நிலையில் இன்று சென்னை திரும்பிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் பாஜகவுடன் கூட்டணி குறித்து கலந்தாலோசித்து பின் அறிவிப்போம் என்று கூறியுள்ளார். இதன்மூலம் நேற்றைய சந்திப்பில் அவர் கூட்டணி குறித்து பேசியிருப்பார் என்றே தெரிகிறது.
மேலும் இதுகுறித்து மேலும் விரிவான தகவல்களை இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை என பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு பிரதமர் கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்று கூறியதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.