மீண்டும் முதல்வராகிறார் நிதீஷ்குமார். பீகாரில் மகாகூட்டணி முன்னணி
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை வந்த முன்னணி நிலவரத்தின்படி பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் லாலுபிரசாத் யாதவ் ஆகியோர்களின் மெகா கூட்டணி ஆட்சிக்கு தேவையான 122 இடங்களுக்கும் மேலான இடங்களில் முன்னணியில் உள்ளது. எனவே மீண்டும் நிதீஷ்குமார் முதல்வராகிறார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணி 145 இடங்களிலும், பாஜக கூட்டணி 88 இடங்களிலும் மற்றவை 11 இடங்களிலும் முன்னணியில் உள்ளது.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகளுக்கு ஐந்து கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க மொத்தம் 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.