பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் ஏற்கனவே ஐந்தாண்டு தண்டனை விதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் லாலு.
தற்போது அம்மாநில முதல்வர் நிதீஷ்குமாரும் சிக்குகிறார். 1995-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் கால்நடைத்துறை அதிகாரி சின்கா என்பவரிடம் இருந்து ரூ.1.40 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தகவல் அறியும் உரிமை சட்டப்படி மிதிலேஷ்குமார் சிங் என்பவர் இதை கண்டு பிடித்தார். நிதீஷ்குமாருக்கு எதிரான தகவலின் அடிப்படையில் மிதிலேஷ்குமார் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு வரும் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நிதீஷ்குமாரும் கால்நடைத் தீவன ஊழலில் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.