shadow

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பண பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதலில் 3 லட்சமாக இருந்த பணப்பெட்டி மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 12 லட்சமாக மாறியதை அடுத்து சிபி அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

அமீர், பாவனி, நிரூப், சிபி ஆகியோர்களில் ஒருவர் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் சிபி பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியுள்ளது நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு ஆச்சரியம் தான். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது சிபி விஷயத்தில் உண்மையாகிவிட்டது.