ஒருநாள் தொடர்: புவனேஷ்குமார் திடீர் விலகல், சிஎஸ்கே வீரர் இணைந்தார்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சமீபத்தில் முடிந்த டி20 கிரிக்கெட் தொடர் போட்டியில் இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில் நாளை முதல் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது

சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் கட்டாக் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கும் இந்த மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பிரபல பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் திடீரென காயம் காரணமாக விலகியுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவரான சர்தூர் தாக்கூர் இணைக்கப்பட்டுள்ளார். இந்த ஒருநாள் தொடர் போட்டிகளில் சர்தூர் தாக்கூர் சிறப்பாக பந்துவீசி ரசிகர்களின் ஆதரவைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply