shadow

எச்.ராஜவே, எங்கள் மண்ணை விட்டு கிளம்புங்கள்: பாரதிராஜா

பெரியார் சிலை குறித்து எச்.ராஜா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துவிட்டபோதிலும் அதை இன்னும் அரசியல் காரணத்திற்காக பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா நான்கு நாட்களுக்கு பின்னர் தற்போது திடீரென பொங்கி எழுந்துளார்.

இதுகுறித்த வீடியோ பதிவு ஒன்றில் பாரதிராஜா கூறியதாவது: “பெரியார் என்பவர் தனி மனிதன் அல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அடையாளம். இந்த அடையாளத்தை அவமானப்படுத்தும் எதையும் எங்களால் தாங்க முடியாது. மூடநம்பிக்கையை உடைத்து, பெண்ணடிமையை எதிர்த்து போராடிய பெரியாரை வாய் கூசாமல் தேசத் துரோகி எனக் கூறும் ஹெச்.ராஜாவே, நீங்கள் பேசியது பெரியாருக்கு எதிரான பேச்சு அல்ல; ஒட்டுமொத்த தமிழனத்திற்கு எதிரானது.

பெரியாரின் சிலை, சாதி வெறியர்களின் சிலை இல்லை. ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளம். ஹெச்.ராஜாவுக்கு ஒரு முடிவில்லை என்றால், அவர் தமிழகத்தை கலவர பூமியாக்கிவிடுவார். ராஜா கேட்ட மன்னிப்பை உற்று கவனித்தால் தெரியும், அதில் உண்மை இல்லை என்பது. எனவே ஹெச்.ராஜாவே, எங்கள் மண்ணை விட்டு, நீங்கள் உங்கள் பெட்டி, படுக்கையுடன் உங்கள் மண்ணுக்குப் போய்ச் சேருங்கள். அப்படியென்றால்தான் நாங்கள் எங்கள் மண்ணையும் மொழியையும் தன்மானத்தையும் காப்பாற்ற முடியும். இதுவே உங்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான தண்டனை’

Leave a Reply